உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 29 ஜனவரி, 2011

குற்றத்தாளிகை

கொத்துக் குண்டுகளும் கொத்தணிக் குண்டுகளும் நச்சுக்குண்டுகளும் நாசிக்குண்டுகளும் அடுக்கடுக்காய்க் கொட்டி குழந்தைகளையும் குடும்பங்களையும் ஏன் இனத்தையே கொன்று குவித்த பின்னரும் பெண்கள் மீதான வன்புணர்வுகள் இளையவர்களை கொத்தியும் வெட்டியும் சுட்டும் கொன்ற பிற்பாடு தமிழரின் வரலாற்று அடையாளங்களை இல்லாதொழித்த பிற்பாடு. மூவிலக்க மக்களை சிறைப்படுத்திய பிற்பாடு சிறையிருக்கும் உறவுகள் பேசிக்கொள்ளும் போழ்து. இது தான் நடக்குமென்று வன்னி போர்மக்கள் அனைவருக்கும் தெரியும் அவர்கள் உரையாடலும் அதுவே........?

தமிழரசி:) அடி தமிழ், போர் முடிந்தாச்சு என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் எங்கள் பாடு இன்னும் சிறைக்கூடத்தில் தானடி கழியுது.

தமிழினி:) அக்கா நாங்கள் எவ்வளவு பாடுபட்டும் எங்கட சனம் உரிமைப்போரை விளங்கிக்கொள்ளவில்லையோ?

தமிழரசி:) அறிவு சார்ந்த எம்மவர்களை தான் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் அவர்களே விடுதலைப்புலிகள் தவறிவிட்டனர் என்று நெருப்பையள்ளி கொட்டுகிறார்கள்.

தமிழினி:) தலைவர் சற்று இறங்கி நோர்வே சொன்னது போல செய்து இருக்கலாமா?

தமிழரசி:) தயவு செய்து நோர்வேயைப்பற்றி பேசாதடி;நோர்வே தான் இப்பொழுது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டாத்தைப் பற்றி சரியாக உலகத்துக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.நோர்வே எரிந்த வீட்டில் எடுத்ததெல்லாம் நயம் என்று நடந்து கொள்கிறது.

தமிழினி: நோர்வேயும் ஏமாற்றிவிட்டதா அக்கா!

தமிழரசி:)ஓமடி, பாதுகாப்பில்லாத போது நோர்வே ஏன் சொன்னது? வெள்ளைக்கொடியோடு வாருங்கோவென்று. நடேசன் , புலித்தேவன் அண்ணை உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட அரசியல் போராளிகளை அரசப் படைகள் கொல்வதற்கு நோர்வேதான் கரணியம். அது மட்டுமல்லடி அமைதிப் பேச்சை சிறிலங்காவரசு எப்படி உடைத்தது என்ற ஆவணத்தை தமிழ்ச்செல்வன் அண்ணையாக்கள் ஒப்படைத்துள்ளனரென்று தமிழ்ச்செல்வன் அண்ணையே என்னிடம் கூறியுள்ளார்.

தமிழினி:) அப்படியா? நோர்வே அதைப்பற்றிப் பேசாமல் வேறு பேசிக்கொண்டு தமிழ்மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதுதா?

தமிழரசி:) ஆமாம்.இலங்கா அரசு தலைவர் இராசபட்சேவை தப்பிக்க வைத்துக்கொண்டிருக்கும் நாடுகள் தம் ஆதாயத்தைத் தேடிக்கொண்டு இருக்கின்றன.

தமிழினி:) சரியக்கா, நாடுகளை விடுங்கோ நம்மட சனங்களும் ஏன் அந்த நாடுகளோடு சேர்ந்து இனத்தைக் கேலி செய்கிறார்கள்.

தமிழரசி:) புலிகளாகிய எங்கள் மீதுள்ள சினத்தை வைத்து தாம் வாழப்பார்கின்றனர். இனி இயலாது என்ற அவ நம்பிக்கையில் அலுத்துக்கொள்கின்றனர். காலநீட்சியில் கவலை கொள்கின்றனர்.

தமிழினி:) இனித் தமிழ்மக்களென்ன செய்யலாம்?

தமிழரசி:) முதலில் இருக்கைகளை விட்டு முதல் தலைமுறையினர் எழுந்து அடுத்த தலைமுறையிடம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய நிதி உதவிகளைக் கொடுத்து உலகெங்கு போர்க்குற்ற வாளிகளுகு எதிராக உலக நாடுகளில் காலந்தாழ்த்தாது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதை அடுத்த தலைமுறையினரே செய்யவும் வேண்டும்.

தமிழினி:) உலக நாடேங்குமா?

தமிழரசி:) தமிழருக்கு அமைதியேற்படுத்தித் தருவதாய் ஏமாற்றிய நாடுகளில் முதலில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உலக அறமன்றம், அமெரிக்கா,நோர்வே, நெதர்லாந்து, தென்மார்க், இவற்றோடு ஐரோப்பிய நாடுகளில் முதல் ஏற்பாடாக மக்கள் பொதுஅமைப்புகள் தமிழ்ச்சங்கங்கள் மக்கள் அவையினர் இளையோர் அமைப்புகள் ஒன்ருபட்டு செயற்பட வேண்டும்

தமிழினி:) அங்கெல்லாம் வழக்குகள் தோற்றால் பணம் வீணாகும் அல்லவா?

தமிழரசி:) நாம் எத்தைனையோ இழந்தோம். புலம்பெயர் மக்கள் ஒன்றைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். தோற்றாலும் அவற்றை வைத்து வாதாடுவதற்கு எங்களுக்கு வாய்ப்புண்டு. அதனால் பணத்தைப் பற்றிக் கவலைப் படாமல் வழக்குத் தாக்கல் செய்யதால் பிற்காலத்தில் நன்மையுண்டு என்பதை அறிஞர்கள் தெளிவுபடுத்தவேண்டும்.

தமிழினி:) சரியக்கா அரசு ஏன் இப்பொழுது ஈ.பி.டி.பி யை ஒதுக்குகிறது.

தமிழரசி:) கடிநாயை விட காவல் நாய் உதவுமே என்றுதான்.....

தமிழினி:) புரியவில்லை அக்கா.

தமிழரசி:)அடியே தோழி இடக்லசை விட கூட்டமைப்பு உதவுமென்றேதான். இருந்தால் பாரேன் கூட்டமைப்போட விளையாட்டை................?

தமிழினி:) இலங்கா அரசு உலகெங்கும் தங்கட இராணுவத் தளபதிகளை அனுப்புவதற்கு கரணியம் என்ன அக்கா?

தமிழரசி:) உலகத்திலேயே பெரிய பயங்கர வாதிகளை அழித்து விட்டதாய் உலக இராணுவப் பின்னலை வலுப்படுத்துவற்கும். தமிழ் ஆயுதக் குழுக்ழோடு உறவைத் தேடிக்கொண்டு தமிழ்மக்களின் போராட்டங்களைத் தடுக்கவும். உள்நாட்டு தள்பதிகள் மோதலைக் குறைக்கவும். போர்க்குற்றவாளிகள் நற்பெயரெடுக்கவும் தான்.

தமிழினி:) தமிழ்மக்கள் எப்படி தமக்குரியதாய் மாற்ற முடியும்.

தமிழரசி:) மக்கள் பொது அமைப்புகளோடு சேர்ந்து முதலில் அக்குற்றவளிகளுக்கு எதிராக; அதன் பின்பு அவர்களை செய்யச்சொன்ன அரசுக்கு எதிராக;அதன்பின்பு இலங்கா அரசுக்கு எதிராக குற்ற வழக்கைத் தொடரவும் வேண்டும்.

தமிழினி:)அப்படிச்செய்தால் தனிநாடு கிடைத்து விடுமா?

தமிழரசி:) இலங்கா அரசுகள் செய்தது இனப்படுகொலை இதன் பின்னணியில் இருந்தது இந்தியா. அதை கோத்தபாயா அடிக்கடி பதிவு செய்திருக்கிறார். ஒளிக்காட்சிகள்,ஒலிபேழைகள்களின் ஆதாரங்கள் உள்ளன. ஒரு தேசியத்துக்கெதிராக நடத்தப்பட்ட அப்பட்டமான படுகொலைகள்.

தமிழினி:) தமிழீழம் கிடைகவேண்டும் அக்கா, அப்பத் தான் இந்த இனம் மீளும்.அதுசரியக்கா எங்களைப்பற்றி அதாவது தமிழ்மக்களைப்பற்றி அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது.

தமிழரசி:)அதுவெல்லாம் அமெரிக்காவின் நடிப்பு. புதுவை அவர்கள் அன்றே அமெரிக்காவின் நிலைப்பாட்டை தனது கவிதையில் வடித்துள்ளார். இந்தியாவும் அமெரிக்காவும் முன்னுக்குப் பின் எதிரியும் நண்பனும், இது இலங்கா ஆட்சியாளருக்குக் கொண்டாட்டம் எம்மக்களுக்குத் திண்டாட்டம் இவர்கள் எமக்குதவார். நம் புலம்பெயர் சொந்தங்கள்தான் வல்லரசுகளின் வாய்ச்சொல்லில் சிக்காது மூச்சோடு செயற்படவும் வேண்டும்???????????

யாவும் கற்பனை

சனி, 15 ஜனவரி, 2011

வள்ளுவராண்டு சுறவம் ௨ய௪௨ (2042)


நாம் இன்று பொங்கலை அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் முன்றலில் பொங்கினோம். தமிழீழத்தின் கிழக்கு தண்ணீரில் மூழ்கிக் கிடக்க இப்பொங்கல் தேவையா? என்ற கேள்வியை அறிவு சார்ந்தோர் எழுப்பியிருந்தனர். ஆனாலும் புலம் பெயந்த நாடுகளில் வாழும் எம்குழந்தைகளுக்கு தைப்பொங்கல் செய்வதை ஒரு செய்முறையாகக் காட்டவே தமிழ்க்கலைக்கூடம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் கலந்து கொண்டோர் பலர் தண்ணீரில் மிதக்கும் நம் தாயகத்திற்கு உதவியும் செய்து கொண்டிருந்தனர்.
பிள்ளைகள் பலர் தைப்பொங்கல் பற்றிக் கவிதைகள் , கட்டுரைகள் எழுதுவதற்காக நேரில் வந்து பார்த்து பூரிப்படைந்தனர்.கடுங்குளிர் சூழ்ந்த பனிகொட்டும் வேளையும் நாம் பொங்கலைப் பொங்கினோம். கோலமிட்டு தென்னங்குருத்தினால் தோரங்கள் கட்டி மிகச்சிறப்பாக புதுப்பனையிலே பொங்கலைப் பொங்கினோம்.
பொங்கி முடிந்ததும் கதிரவனுக்குப் படைத்துப் பின் அனைவரும் பொங்கலை உண்டோம். நன்றி செலுத்தும் இந்நாளிலே அனைவரும் நன்றி உணர்வோடு தம் வாழ்த்துகளை தெரிவித்தனர்.நானும் என் நண்பர்களுக்கும் கலைக்கூட ஆசிரியர்களுக்கும் வாழ்த்தைத் தெரிவித்தேன்.



_ச.உதயன்_

சனி, 8 ஜனவரி, 2011

பொங்கலோ பொங்கல்

காளை மாடுகள் ஏர்பூட்டி
காலை மாலையும் மண்புரட்டி
சேற்றில் நின்றுதான் நாற்றிறுக்கி
சேர்ப்பார் மூட்டையில் நல்மணியே!

பொங்கல் பொங்கிட நல்மணிகள்
எங்கும் வீட்டினுள் காத்திருக்கும்
கங்குல் சூழ்ந்த முற்றத்தில்
பொங்கல் வேலைகள் தொடங்கிடுமே!

வாழை தோரணம் கரும்புடனே
நாலாய்ப் பக்கமும் அலங்கரித்து
கோலம் மாவினால் போட்டுவைக்க
காலை யாதவன் வருவானே!

வந்த ஆதவன் மகிழ்ந்திருக்க
சிந்தும் வெள்ளொளி பயனாக
பொங்க வாயிலே பால்திரண்டு
பொங்கல் பொங்குவோம் தமிழினமே!

பொங்கலோ பொங்கல்

_ச.உதயன்_

சனி, 1 ஜனவரி, 2011

௨ய௪௧

ச.உதயன்:)
கங்குல் படர்ந்த கடுங்குளிர் தன்னிலே
செங்கனல் கக்கிய சீர்வாணம் - எங்கு
மொளியை பரப்பியது போன்ம்தமிழர் பொங்கும்
மொழிப்பகை வீழ்த்துவார் காண்

அருள்சீலன்.கரிசன்:)
கலப்பனதான் கலந்தால் ஓர்பெயரே கலக்காவாம்
விலக்கென்ற பின்விளையின் இழிபெயரே -முலைப்பாலில்
கஞ்சியினைக் கலப்பின் முலைப்பாலே பாலோ
நஞ்சினையே நாம் கலந்தபின்?

ச.உதயன்:)
தங்கமே தாரகையே பொய்கையே பேரொளியே
எங்குமே பொங்கியெழும் வாரியே - மங்குவாளோ
எங்கள் தமிழ்மொழித் தாய்