உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அண்ணையின் அன்னைக்கு

பாராண்ட இனமொன்று
......பரித்தவித்த வேளையிலே
பாராள வேண்டுமென்று
......பெருமகனைக் கொடுத்தனையே
தானாள வேண்டுமென்று
.......ஒருபோதும் நினைத்ததில்லை
தமிழாள வேண்டுமென்றே
.......தம்பியரும் நினைக்கின்றார்
சீராளன், சீராளன் சினந்தாலோ
.......சிங்களத்தான் படையுடையும்
ஆனாலும் தாயே
.......அவன்வாயால் "அம்மே"
என்றழுதாலோ அவனுக்கும்
.......உயிர்ப் பிச்சை
அளிக்கின்ற வீரம்
.......அவனெல்லவோ மறவன்.

அம்மகனை ஈன்றெடுத்தாய்
.......அதுவே நற்பேறே
வம்பனாய் தும்புக்குப்
......போனதுமில்லை போக்கிரியாய்
சண்டைசச்சரவு செய்ததோயில்லை
.....தமிழர் நோவதைக்
கண்டவுடனே களத்தில்
.....குதித்தான் வீரர்மரபாய்
ஆயினும் இரண்டகன்
.....பஸ்ரியாம் பிள்ளை
கடைக்குட்டி யவனையொருநாள்
..... கம்பியெண்ண வைப்பனென்பான்
முடிந்தால்நீயும் பிடியேன்
........அதற்கு முன்பே உன்னையவனும்
பிளந்து போடுவான் என்பாய்
..........அன்னையேயுன் பேச்சில்
தமிழ்த்தாய் பூரித்தாள்
......நீயின்றிஆரோ தமிழ்த்தாய்

வாசகசாலைக் குற்றியிலே
.....வரிசையாய் இருந்து
நகைச்சுவை சொல்லி
....நாள்கழித்த கூட்டத்திற்குத்
தெரியாது தாயே
.....போராட்டத்தின் வலி
குண்டுக்கும் நடுவில்
......குப்பிக்கும் அருகில்
மண்மூட்டைக்கும் இடையில்
.....பார்வல் இருக்கையில்
இருந்தானுக்குத் தானே
....தெரியும் விழுப்புண்ணின்
வேதனையும் தாகமும்
........விடுதலையின் பண்ணும்
முப்பதாண்டுகள் மண்டையுடைந்து
.......முக்கிமுக்கி முடியாதென்று
முப்பஃது நாடுகளைக்
......கூவி அழைத்து
மக்களை எல்லாம்
.....நரபலி ஆக்கி
இராசபட்சிகள் வென்றோவிட்டன
.....ஒருபோதுமில்லை வெல்வோம்