உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

வெள்ளி, 15 ஜூலை, 2011

நீண்ட வழித்தூது


நெகிளப் பந்துகளே
நெகிளப் பந்துகளே
நீண்டு நெடித்து
நீல வானிலே
நிமிர்ந்து செல்கிறீர்கள்
அசைந்து அசைந்து
செல்லுகையிலே
எங்கள் தேசியக் கொடியை
வானில் அங்கிகரித்துச்
செல்கிறீர்கள்
நீண்ட இலக்கு
நீண்ட நினைவு
நீண்ட போரும்
போராட்டமும்
நீண்டே தான்
போகிறது ஆயினும்
தளராதீர்கள்

புடைப்பான்களே
போகும் திசைகளில்
புயல் வந்து தடுக்கலாம்
அவ் வல்லாதிக்கங்களை
எப்படி வெல்வதென்ற
பாடநெறி தந்துள்ளோம்
வெல்வீகள் என்ற
நம்பிக்கை கொண்டுள்ளோம்
விண்வெளியில்
வெள்ளிகளாய் மின்னி
சிலர்
பூச்சாண்டி காட்டுவார்கள்
முகில்களாய்க் கூடி
இடியாய் நக்கலும்
செய்வார்கள்
மின்னல் பேச்சுக்களால்
உங்களில் படமும்
வரைவார்கள்
மாறி விடாதீரகள்
நாகரிகமுள்ள ஓர் இனத்தின்
நாயகர்கள் நீங்கள்
அவ்வளவு விரைவில்
மாறிவிடலாமா? என்ன?

தொடர்பற்றுப் போன பின்
நீண்ட காலமென்றும்
நெடுத்த பயணமென்றும்
கேட்க ஆளில்லை என்றும்
உங்களில் சிலர்
மாறக்கூடும்
விட்டு ஓடக்கூடும்
வேண்டாத விளையாட்டு
இதுவென்று விலகக்கூடும்
மாவீரரையும் மரணித்த
மக்களையும் எண்ணிக்கொண்டே
செல்லுங்கள்
தமிழீழம் விடுபடும்
தென்றல் வீசும்
நம்புங்கள்

காத்துப் பெட்டிகளே
கோடை வெயிலில்
போகும் திக்கில்
தனிவீட்டின் வெளிமாடத்தில்
கூடியிருந்து தேசியத்தின்
அக்கறை போல்
தேசியக் கொடி
மாற்றம் பற்றிப் பேசுவார்கள்
காறித்துப்பிவிட்டுச் செல்லுங்கள்

ஆண்டாண்டு காலமாய்
அரத்தஞ் சிந்தி சிந்தி
ஆங்கிலேயரிடமிருந்து
விடுதலையான (ஸ்)கொத்லாந்தைக்
கடக்கும் போழ்து
வாழ்த்துப் பெற்றுச்செல்லுங்கள்
அருகே,
காட்டிக் கொடுத்து
காட்டிக் கொடுத்து
வாழமுடியாமல் இன்னும்
போராடும் அயர்லாந்து
பக்கம் செல்லாதீரக்ள்

அங்கே தான் அங்கேதான்
கொடுங்கோலரைத் தங்ககதில்
தங்கவிடாது விரட்டியடித்த
மானத் தமிழ்மாந்தர்
தாயக வேட்கையோடு
அதே மண்ணில் தான்
தமிழினப் படுகொலையை
உலகுக்குக் காட்டிய
ஒளியலை (4)நான்கும்
கையெடுத்து கும்பிடுங்கள்
எங்கள்
நம்பிக்கை ஒளி

இங்கிலாந்தைத் தாண்டவும்
இரண்டாம் உலகப்போரில்
இடியுண்டு போன
இனங்களையும் புதிதாய்த்
தோன்றிய நாடுகளையும்
காண்பீர்கள்....
பாலை தாண்டவும்
பாதிக் களைப்பு
வந்துவிடும்
முடிச்சை அவிழ்த்து
மூச்சை எறியலாம் என்றும்
எண்ணம் வரும்
இது நம் பிறங்கடைகளின்
எதிர்காலத்தை உருவாக்குவதற்கான
உழைப்பு ஏன் களைப்பு
ஓரிருவராயினும் ஒருங்கிணைந்து
செல்வோம் என்ற உறுதியோடு
செல்லுங்கள்

எம் குழந்தைகளையும்
குடும்பித்தினரையும்
கொட்டக் கூடாத குண்டெல்லாம்
கொடுத்து இனமழித்த இந்தியம்
காந்தியத்தின் பொய்யும்
கொண்ட நாட்டையும்
கடந்தால் அப்பால்
ஒரு தீவு
இரு வேறு வாழ்வாதாரம்
என்றுமே சேராது
சேரவே சேராது
இருநாடு என்பதே
அமைதி வேண்டும் தீர்வு
அந்த அமைதியின் வரவுக்காய்
அழுகுரலின் நடுவே
ஒரு தமிழ்ப்பிஞ்சு
அதன் இருகைகளிலும்
சேருங்கள் சொல்லுங்கள்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
ச.உதயன்.