உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

திங்கள், 3 அக்டோபர், 2011

அண்ணல் திலீபன்


பாரதப் படைகள் கால்வைத் தநாளில்
ஆயிரத்துத் தொள்ளா யிரத்து எண்பத்தேழில்
ஆய்த பலத்தை ஒப்படைத் துவிட்டு
அறத்தின் வழியே புலிகள் நின்றனர்
பாரதப் படைகள் செய்தது என்ன?
நேருவின் பெயரன் செய்தது என்ன?
இந்திரா காங்கிரசு செய்தது என்ன?
இரத்தமும் இறப்புந்தான் தந்த தெமக்கு
நாங்கள் கேட்பது எங்க ளுரிமையை
யாங்கள் கேட்பது எங்களது மண்ணை
நாங்கள் கேட்பது எங்கள் ஆட்சியை
நீங்கள் கேட்டால் நியாய மாவது
யாங்கள் கேட்டால் பயங்கர வாதமோ?
என்னடா உலகம் என்னடா சட்டம்
கோடி மக்கள் திரண்டு அடித்தால்
ஓடிப் போகவேண்டும் என்பதோ நீதி
நடக்க இருக்க பாயில் கிடக்கநம்
நிலத்தில் குந்தி தென்றலை வாங்கி
நிலவைப் பார்த்து நிம்மதியில் பாடி
உலக மாந்தராய் நாமும் வாழ
வேண்டு முரிமை நமதினத் திற்கே
என்றார் தலைவ ரதுதான் உறுதி
இந்தியம் நினைத்ததோ இப்படி யல்லவோ
இருப்பது எதுவோ ஒன்றோ யிரண்டோ
இரண்டகரைக் கொண்டு அழித்து விடலாம்
இந்தியம் சொல்வதும் இதுதான் அல்லவோ
காதில் எமக்குக் பூவைச் சுத்த
கண்ணியத் தலைவன் இடமளிக் கவில்லை
அரியணை யெமக்கு வேண்டவே வேண்டா
அழிவுறு(ம்) மக்கள் உரிமை வேண்டும்
தலைவன் இலக்கை அறிந்த அண்ணல்
தம்மை இலக்காய் உருக்க வந்தார்
இந்தியத்தின் அடிவருடி களாய்க்கிடப் பதைவிட
சொந்தக் காலில் நிற்பதே மேலென்று
மான மொன்றே வாழ்வென வெண்ணிக்
காலை யந்த வேளை நல்லூரிலே
கடுந்தவ மொன்று தொடங்கிற்றுக் கண்டீர்
வாயில் நீரைக்கூட அருந்தாது கந்தன்
வாயிலில் புதிய வேள்வி நடந்தது
ஓரிரு நாள்க ளுருகி நோக
மிடறு வறண்டது குரலு மறுந்தது
உடலும் வெந்தது உயிருஞ் சுருண்டது
ஐயிரு நாள்கள் நம்திலீபன் வேட்கை
கண்டு மிந்தியம் காணாமல் நின்றது
எங்கள் பிள்ளை மேனி வாடியும்
தங்கள் தீர்வை திணித்ததே யிந்தியம்
பதினொரு நாளில் வயிற்றுப் புண்ணுடன்
பட்டினி கிடந்தே பிள்ளை வாடினான்
ஐயோ ஐயோ ஐயா திலீபன்
பன்னிரண்டாம் நாள்பிள்ளை பாடையிற் கிடந்தான்
ஓவொன் றுவானம் அழுதது போல்
ஓலமிட் டழுதன சாலை யெங்கும்
ஐயகோஒ ஒ.ஒ.ஒ.ஒ. ஒ.ஒ.ஒ.ஒ ஒ.ஒ.ஒ.ஒ.
இந்தியம் நம்பிக்கைத் துரோகம் செய்தது
எம்மினம் தம்மிடம் நம்பிக்கை கொண்டது
எத்தனை இடர்கள் வந்திட்ட போதும்
எத்தனை சிறைகள் எம்மை அடைத்தாலும்
எங்களின் தாயக ஓர்மம் அடங்காது
திலீபன் அன்று ஏற்றிய தீபம்
தமிழன் நெஞ்சில் என்றுமொ ளிரும்மே!
_ச.உதயன்_