உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

செவ்வாய், 18 மார்ச், 2014

வைத்திலிங்கம் சுந்தரலிங்கம்

Lankasri Notice!

என்னம்மைக்கு மூத்தவனே

எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவனே

உன்மனைவி பிள்ளைகளை

ஏன்பிரிந்து சென்றனையோ!

வைத்திலிங்கம் யோகம்மாவின்

வயிற்றிலுதித்த வைரமே!

வான்படை வீரனாயும்

ஞானம்ஸ் நிருவாகியாயும்

சனசமூக செயற்பாட்டாளராயும்

தினமியங்கிய பொறுப்பாளனே!

நான்பார்க்கும் போதெல்லாம்

தாளிகையும் கையுமாய்

நிழல்பிடிப்பதில் படப்பிடிப்பாளராய்

வாய்நிறைய ஆங்கிலதோடு

வலம்வந்தாய் தாய்மாமனே!

தங்கைக்குச் சீர்கொடுத்து

தங்கத்தை அனுப்பிவைத்து

அவளீன்ற மகனைநீ

ஆராட்டி ஓராட்டி

பாராட்டி வளர்த்ததனால்

தமிழ்திரட்டில் உனைவைத்தேன்

வாழ்க நின் புகழே!