உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 19 பிப்ரவரி, 2011

மாவீரன் முத்துக் குமரனுக்கே

ஈழத்து மக்கள் இழந்ததை மீட்கவே
ஈனப் பிறவிகள் இருப்பிடம் துரத்தவே
மீளாத் துயரில் மனதது உறுத்தவே
மீட்க வந்தனன் முத்துக் குமரனே

அண்ணா சிலையும் ஆடுமாப் போல
கண்ணாடிக் குருடன் ஆளும் நாட்டிலே
கருணாக் கும்பல்கள் கத்தி வாளோடு
அரக்கம் ஆடியதோ முத்துக் குமரனே

அகிம்சை வழியிலே ஆய்தம் தரிக்காது
மகிந்தா கருணா கொடுங்கோல் சாய்க்கவே
அகிலம் தழைக்கவே அமைதி பிறக்கவே
அகலாய் ஒளிர்கின்றனை முத்துக் குமரனே

அறுக்க வறுக்கவே அறுகும் வேர்விடும்
அறுக்கும் அடிவாழை தழைத்தே நிமிரும்
பொறுப்போம் பொறுப்போம் பொறுமை இழக்காது
பொறுத்தார் புவியாள்வார் முத்துக் குமரனே

தீயிலே வேகினை தேகம் கருக்கினை
தோய்ந்து அரத்தத்திலே தேகம் சரித்தனை
ஆயினு மேறுவோம் புலியணை நாளையேநம்
பாயிர வாழ்த்திலும் முத்துக் குமரனே

_ச.உதயன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக