உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

ஞாயிறு, 25 மே, 2014

பண்ணைச் சீவியம்!


வேட்டைக்காரன்

சாந்தம் அண்ணன்

வடிஎண்ணெய் ஊர்தி

மந்தை ஆடுகள்

மடிமுட்டிக் குடிக்கும்

குட்டிகள்

கறவை மாடுகள்

கன்றுகள்

குஞ்சுகளைக் காக்க

கொத்த வரும்

குருகுகள்

வெள்ளைச் சேவல்கள்

வெகுண்டோடும்

பேடுகள்

கடாயுயர

கடுவன் நாள்

அழுக்கு வாளிகள்

மழைத் தூறல்கள்

கதிரையின் கனைப்பு

கூவும் சத்தம்

உணவு மணியொலிப்பு

காஞ்சோண்டி

பருப்பு

கூழ்

அப்பா! அப்பப்பா!

விறகுச்சூட்டு வெக்கை

சுடச்சுட உறிஞ்சிக்

குடிக்கும் சிலநிமையம்

ஓய்வு நேரம்

நிழற்படம்

மீண்டும் திட்டம்

வேலை நேரம்

வீட்டுத் தோட்டம்

நெசவுக் கூடம்

கைவினை மண்டபம்

காந்தியின்

மண்டேலாவின்

படங்கள்

சிசிலின்

ஆளுமையை

விளக்கியபடி

விடைபெற்ற மட்ட

தோட்டப் பயிர்களை

நாட்டும் பொழுது

நகர்ந்தது

நாழி

அதுவொரு

பண்ணைச்

சீவியம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக