உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 15 ஜனவரி, 2011

வள்ளுவராண்டு சுறவம் ௨ய௪௨ (2042)


நாம் இன்று பொங்கலை அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் முன்றலில் பொங்கினோம். தமிழீழத்தின் கிழக்கு தண்ணீரில் மூழ்கிக் கிடக்க இப்பொங்கல் தேவையா? என்ற கேள்வியை அறிவு சார்ந்தோர் எழுப்பியிருந்தனர். ஆனாலும் புலம் பெயந்த நாடுகளில் வாழும் எம்குழந்தைகளுக்கு தைப்பொங்கல் செய்வதை ஒரு செய்முறையாகக் காட்டவே தமிழ்க்கலைக்கூடம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் கலந்து கொண்டோர் பலர் தண்ணீரில் மிதக்கும் நம் தாயகத்திற்கு உதவியும் செய்து கொண்டிருந்தனர்.
பிள்ளைகள் பலர் தைப்பொங்கல் பற்றிக் கவிதைகள் , கட்டுரைகள் எழுதுவதற்காக நேரில் வந்து பார்த்து பூரிப்படைந்தனர்.கடுங்குளிர் சூழ்ந்த பனிகொட்டும் வேளையும் நாம் பொங்கலைப் பொங்கினோம். கோலமிட்டு தென்னங்குருத்தினால் தோரங்கள் கட்டி மிகச்சிறப்பாக புதுப்பனையிலே பொங்கலைப் பொங்கினோம்.
பொங்கி முடிந்ததும் கதிரவனுக்குப் படைத்துப் பின் அனைவரும் பொங்கலை உண்டோம். நன்றி செலுத்தும் இந்நாளிலே அனைவரும் நன்றி உணர்வோடு தம் வாழ்த்துகளை தெரிவித்தனர்.நானும் என் நண்பர்களுக்கும் கலைக்கூட ஆசிரியர்களுக்கும் வாழ்த்தைத் தெரிவித்தேன்.



_ச.உதயன்_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக