உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 8 ஜனவரி, 2011

பொங்கலோ பொங்கல்

காளை மாடுகள் ஏர்பூட்டி
காலை மாலையும் மண்புரட்டி
சேற்றில் நின்றுதான் நாற்றிறுக்கி
சேர்ப்பார் மூட்டையில் நல்மணியே!

பொங்கல் பொங்கிட நல்மணிகள்
எங்கும் வீட்டினுள் காத்திருக்கும்
கங்குல் சூழ்ந்த முற்றத்தில்
பொங்கல் வேலைகள் தொடங்கிடுமே!

வாழை தோரணம் கரும்புடனே
நாலாய்ப் பக்கமும் அலங்கரித்து
கோலம் மாவினால் போட்டுவைக்க
காலை யாதவன் வருவானே!

வந்த ஆதவன் மகிழ்ந்திருக்க
சிந்தும் வெள்ளொளி பயனாக
பொங்க வாயிலே பால்திரண்டு
பொங்கல் பொங்குவோம் தமிழினமே!

பொங்கலோ பொங்கல்

_ச.உதயன்_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக