உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தமிழ்

தமிழ்
மூவினங்கள் கலந்த தமிழ்
முத்தமிழாய் வளர்ந்த தமிழ்
மூவேந்தர் நாடுகளில்
முடிசூடி ஆண்ட தமிழ்

சிவனோடு நடமாடி
செந்தமிழாய் வாழ்ந்த தமிழ்
சீவுளியால் செதுக்கி முன்னோர்
செம்மொழியாய் காத்த தமிழ்

பகையோடு களமாடி
கரும்புலியாய் வாழும் தமிழ்
புலம் பெயர்ந்த நாடுகளில்
தலைமுறையை காக்கும் தமிழ்

பெண்ணினத்து அடிமைகளை
பெயர்த்தெறிய முழங்கும் தமிழ்
பதினாறு குணங்களையும்
பாரினிலே கொண்ட தமிழ்

குமரிமலை நிலம் தொட்டு
தமிழீழம் இன்று வரை
அனுபவங்கள் கூறுந்தமிழே
அந்தமிழே எங்கள் தமிழ்

_அரசன்.தமிழரசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக