உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 11 செப்டம்பர், 2010

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்

மாமரக் கூடல்
மழை பெய்தால்
வெள்ளமாகும்
விளையாட்டுத் திடல்

தேவார மண்டபம்
திரிந்த வளாகம்
நாடக அரங்கம்
நடித்த மேடை
.
பாடிய பாடல்
கீறிய கீறல்
எழுதிய கவிதை
எல்லாம் அங்கு தான்.
.
சின்னச் சின்ன கைகள்
செதுக்கி வைத்த
களிமண் சிற்பங்கள்!
.
வண்ண வண்ண
நிறங்கள் ஊற்றி
வடிவாய் வரைந்து
வைத்த சித்திரங்கள்!
சேர்த்து
வைத்த
கூடம்!
.
குட்டி போட்டு
குலை தள்ளிய
வாழை
வெயிலடித்தால்
குடை பிடிக்கும்
வேப்பமரம்
.
புகை படிந்த
சமையறை
சமைத்துக் கொடுத்த
சூடான கொழுந்து நீர்
சுவையான வடை
நரம்பை
சுண்டியிழுக்கும்
.
எங்கோ சேய்மையில்
கூவும் குயில்ச் சத்தம்
மயிலிறகு வீசும்
மரவள்ளித் தோட்டம்
மனதை வருடும்
மென் காற்று
.
காற்றோட்டமுள்ள
கட்டைச்சுவர் படிப்பறை
கடைசி வரிசையில்
கவனிப்பாரற்று
காலுடைந்த
இருக்கை
.
கவத்தை ஈட்டும்
கவனமில்லா
அகவை அது
.
முன் வாங்கார்
பின் வாங்கில்
பின் வாங்கார்
முன் வாங்கில்
இடையே என்னிருப்பு
எண்ணமெல்லாம்
கவிஞனாய் மேடையில்
.
இடையிடை ஒலிக்கும்
மணியும்
இடைவேளை மணியும்
இறக்கை விரித்து
பறக்க வைக்கும்
.
சத்திரதில் காத்திருப்போர்
போல்
சத்துணவுக்காய்
நாம்
.
பயரோ ஒரு கவளம்
சுண்டலாயின் ஒரு சுண்டு
கடலைக்கு கைச்சுருள்
நாளுக்கு நாள்
எதிர் பாராது
நம்மை வளர்த்த
பள்ளிக் கூடம்
.
அன்று
அந்தப் பள்ளியில்
மாணவப் பருவம்
இன்று
அன்னை பூபதியில்
மாணவருக்கருகில்
ஆசானாய் பேறு
பெற்றேன்.
.
நாவினிக்க படித்த
தமிழ்
நாடு தாண்டியும்
பயனாகிறது
நன்றியம்மா
நன்றி
நானறிந்த பள்ளிக்கூடமே!

_அரசன்.தமிழரசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக