உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

புதன், 29 செப்டம்பர், 2010

போரியலைக் கற்றுக் கொடுத்த கோழி

தமிழீழம் தனிநாடு வேண்டி போராடிக் கொண்டிருக்கின்ற நிலம். கிழக்கு வடக்கு அதனுடன் இணைந்த நிலப்பரப்புகள். வன்னி நிலம் வடக்கோடும் கிழக்கோடும் அமைகின்றது. வடக்குப் புறத்தில் குடாநாடு. யாழ் குடாநாடு சுற்றிவர அரச படைனர் சூழ்ந்திருந்தகாலம். நீளேவுகணைகளின் அச்சம் மட்டுமன்றி போரூர்திகளின் குண்டுவீச்சும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தநிலம்.யாழ் வரவில் இருந்து கிட்டத்தட்ட நான்கு (கி.மீ) நெடுஞ்சாலை வரை அமைந்துள்ள ஊரான அரியாலையில் தான் நடந்த நிகழ்வு.

(காக்கையிடமிருந்து குஞ்சை மீட்டது பற்றி முன் பக்கத்தில் கூறப்பட்டது).காக்கையிட மிருந்து குஞ்சை மீட்டு பரிவோடு வளர்ப்பதைக் கண்ட பூர்னாம்பிச் சித்தி தன்னிடம் நின்ற கோழிக்குஞ்சிகளில் ஒன்றை வளர்க்கத் தந்தார். அது பேட்டுக் குஞ்சு பஞ்சுபோல் மேனி. அதை சித்தியிடமிருந்து வாங்கி வந்து வளர்த்தோம். அதுவும் வளர்ந்து பேடானது. கன்னிக்கோழி கேரும் போது என்ன அழகு! அது முட்டையும் இடத்தொடங்கியது.ஆனால் அம்மை எங்களுக்குத் தருவதில்லை அவற்றை அடைகாக்க சேமித்தார். அவ்வெள்ளைக் கோழியும் அடைக்காக்கும் பருவமானது. கிட்டத்தட்ட பத்து முட்டைகள். வீட்டுக்குப் பக்கத்தில் பத்தியுள்ளது. பத்திக்குள்ளேயே அடைகாத்தது. அடைகாத்து சில நாள்களில் குஞ்சுகளும் பொரித்தது வெளியே வந்தன. எல்லா குஞ்சுகளும் பொரித்தன. எங்களுக்கு பருந்து,காக்கை,வல்லூறு என்று சில பறவைகளிடமிருந்து காக்கவேண்டிய பொறுப்பும் இருந்தது. கரப்பைத் துறந்து விட்டு கன்ணுக்குள் எண்ணெய் வார்த்தது போல் நிற்க வேண்டும்.

இப்படித்தான் ஒருநாள் தாய்க் கோழியும் குஞ்சுகளும் இரைகளைத் தேடி வேலியோரமாக பக்கத்து வீட்டுக் கோடிக்குள் நின்றன. திடீரென பரபரப்பு காக்கை குஞ்சை தூக்கப் பார்த்து பறந்ததைக் கண்ட தாய்க் கோழி காக்கையைத் துரத்துக் கொண்டு பறந்தது. கோழி பறக்காதென்பர் என் வீட்டு வெள்ளைக் கோழி பறந்தது. காக்கை குஞ்சைத் தூக்கி விட்டதோ என்று பதறிக்கொண்டு ஓடிப் போய் குஞ்சுகளைத் தேடினேன். என் கண்ணுக்குத் தெரியவில்லை. காகத்தைத் துரத்திய இறுமாப்பில் செட்டைகளையும் விரித்துக்கொண்டு குஞ்சுகளிடம் வந்தது. அந்தக் கோழியின் அழகு எதிரிகளின் பாசறைகளை தகர்த்தெறிந்து விட்டு பெண்புலிகள் மிடுக்காய் நடந்து வருவார்களே! அதைபோலத் தான். தாய்க்கோழியைக் கண்ட குஞ்சுகள் புற்களிலிருந்து வெளியே வந்தன. என்ன வியப்பு இவற்றுக்குப் போரியலைக் கற்றுக்கொடுத்தது யார்? எப்படி போரியலைக் கற்றுக் கொண்டன?

சூழலுக்கேற்ப தங்களைத் திறம்படுத்திக் கொண்டால் நீண்ட இடரைத் தடுக்கலாம்.

_ச.உதயன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக