உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 11 செப்டம்பர், 2010

முகநூல் மின்மடலூடாக....

ச.உதயன்:)
"அருமை வரிதந்த பேரா. தியாக
இராய ரெனும்நற் றமிழ்தா யுவக்கு
முரைநடை வேந்தே! முகநூலு முன்னால்
நிறைந்தநல் காவிரி யாறு."

இராஜ.தியாகராஜன்:)அரு-இரா அடியெதுகையாகா. (முதற்சொல் ஓரினம்-குறில், ஆனால் இரண்டாம் சொல் ரு-ரா ஓரினமில்லை)
உரை-நிறை அடியெதுகையாகா. (வல்லின ற மெல்லின ர)

"உருவான பாட்டும் 'உதயக்' கவியே
அருமை! அழகொளிர் அன்பாய் - கரும்பனைய
சொல்லாலே எண்ணித் தொடுத்தக் கவிச்சரமோ
சில்லென்றே சிந்தும் சிலிர்ப்பு."


இராஜ.தியாகராஜன்:)உங்கள் பாடலை என்னால் இயன்றவரை உங்கள் அனுமதியுடன் மாற்றியிருக்கிறேன்; ஆனால் உங்களின் உரைநடை வேந்தன், பேராசிரியர் என்பன போன்ற புகழுரைக்கு நான் நிச்சயம் அருகதை உடையவன் அல்லன்.

அருமை வரிதந்த அன்பராம் ஈகை
அரச ரெனும்நல் லமிழ்தா யினிக்கும்
உரைநடை வேந்தே(!) முகநூலும் உம்மால்
அருஞ்சுவைக் பொன்னியே ஆம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக