உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 11 செப்டம்பர், 2010

உதயனுக்கு இதய வாழ்த்து

நாவினிக்கும் நல்ல பெயர்;
நல்ல தமிழ்ச் சிந்தனைகள்;
பாவுரைக்கும் பா’த்திறமும்
பைந்தமிழன் பாத்திரமும்

உதயன் எனக் காண்கின்றேன்;
உளம் மகிழ்ந்து உரைகின்றேன்;
இதமுடென் முக நூலில்
இன்றே நான் இணைக்கின்றேன்!

இசையரசி எம்.எஸ்’ஸின்
இல்லத்தில்,உள்ளத்தில்
அசைபோட்டு வாழ்ந்தவன்நான்;
அக் காலம்;பொற்காலம்!

அவர் படததை இணைத்துள்ளீர்;
அதனாலும் ஓர் வாஞ்சை!
விவரங்கள் தொடர்வோம் நாம்,
விரிவார்ந்த நட்புடனே...
*
(2)
”நன்று;உள்ளம் செழித்த நல்ல நண்பர்
நமக்குக் கிடைத்த உலகத் தமிழர்;
என்று மகிழ்வாய் ஏற்புரை செய்தேன்;
இதயம் உதயனை வாழ்த்துகின்றது!’

நாலடியாரை நலமுடன் எடுத்து
நாலாதிசைகளும் நவில்கின்றவாறு
நூலிதில் காட்டினை;நுகர்ந்தேன்;இங்கு
நூதனத் தமிழை நூற்றுத் திளைப்போம்!

உலகத் தமிழர் எனும் என்தளத்தில்
உண்மைத் தமிழும் உணர்ச்சித் தமிழும்
பலவிதமாகப் பதிந்ததைச் சென்று
பாரீர்;என்றே வேண்டுகின்றேனே!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா

1 கருத்து:

  1. நன்று;உமது முன்றில் முயற்சி;
    “நற் றமிழுக்கு உற்ற வளர்ச்சி”
    என்று கண்டேன்;எல்லாப் பக்கமும்
    இனிமை;அருமை;புதுமைதானே!

    அன்புடன்-
    கிருஷ்ணன் பாலா

    பதிலளிநீக்கு