உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 11 செப்டம்பர், 2010

மனு

மனு

பட்டதாரிகளே!
ஐயா! பட்டதாரிகளே!
நலமா, உங்கள்
அழுக்குப்படாத மட்டைகள்
எல்லாம் நிலைப்பெட்டகத்துள்
நலமா! இருக்கட்டும்.
பூச்சி அரிக்காம
அடிக்கடி
பூச்சிமுட்டை போடுங்கோ
.
BA,MA,Dr அட உங்க
பட்டங்கள் கூட
ஆங்கிலம் தான்
பேசுது பாருங்க
பேசட்டும் பேசட்டும்
.
தண்ணீரில் கால் வைத்து
தவமாய் இருந்து
படிச்சு படிச்சு
என்னத்தைக் கண்டீர்?
என்ன தான் செய்கிறீர்?
.
பாரதச் சுருக்கத்தில்
பாதி நாள் போச்சு
கம்பன் தொகுத்த
பதினாலாயிரம்பாடல்
பாவியத்தில்
பாதி நாள் போச்சு
என்னத்தை படித்தீர்?
என்னதான் செய்கிறீர்?
.
கற்பில் சிறந்தவள்
கண்ணகி என்று
கட்டிய மனைவியை
சோதனை செய்யும்
பட்டாளத்தை உருவாக்கினீர்.
.
சக்கர நிலவு
சக்கரை நிலவாம்
நிலத்துக்கு சேலைகட்டி
உலவ விட்டுகிறானாம்
கொக்கை மீன் முழுங்குதாம்
அறுகம்புல் ஆட்டை மேயுதாம்
திரையில் கிறுக்கும்
கிறுகன்களை உருவாக்கினீர்.
.
அகத்தில் இருக்கும்
அசூரனைக் கொல்லாமல்
ஆண்டுதோறும்
சூரன் போர் நடத்துது
கோயில் படை
"பயிர் வாடும் போது
நானும் வாடினேன்"
சுவருக்கு அறிவுரை
கூறிவிட்டு
வாழைவெட்டு நடத்துது
பூனூல் படை
புராணங்கள் தான்
மிச்சம்.
.
திருத்தமாட்டீரோ
திருத்த வந்த பட்டறிவாளன்
பாவாணரையும் விரட்டி
வேடிக்கை பார்த்தீர்
இன்னும் இருக்கிறார்
உம்மால் விரட்டப்பட
திருந்த மாட்டீரோ
இனியேனும் இலேகியங்களே
.
சோதனைக்கு எழுதி எழுதி
களைத்துப் போனதோ!
மை காய்ந்து
தூவல்கள் எல்லாம்
தூங்கி விட்டதோ!
.
மாடு சொன்னா கேட்காது
மணிகட்டின மாடுகள்
சொல்ல வேண்டும்
மந்தைகளுக்கு
மந்திகளுக்கு
.

_அரசன்.தமிழரசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக