உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 25 செப்டம்பர், 2010

காயத்திரி

மங்காத் தமிழரை
மாற்றார் கொல்ல
வங்கம் முழுதும்
அரத்தம் சொரிய
எங்கோ புலத்தில்
ஏங்கிக் கிடந்தோம்
எங்கள் உறவே
எமக்காய் அழுதீரே!

ஐயாஐயா
முத்துக் குமரா
அகத்தில் கொண்ட
தமிழர் பற்றால்
சிதையினை யுடலில்
சினத்துடன் மூட்டினீரோ!

மூத்த குடி
வாழ்ந்தநாட்டில்
மூஉ வேந்தர்
ஆண்ட நாட்டில்
முத்தமிழை வளர்த்த
முதுதமிழ் நாட்டில்
முத்துக் குமரன்
செத்துக் கிடந்தாரோ!

ஈழதம் முறவுக்காய்
தன்னுடலில் மட்டுமல்ல
எல்லோர் நெஞ்சிலும்
மூட்டிய நெருப்பு
ஈழநாட்டில் தமிழீழம்
காணுமரை அணையுமோ!

_ச.உதயன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக